30 நாட்களுக்குள் முகப்பருவை நிரந்தரமாக அகற்றிவிடலாம்.

பல பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முகப்பரு தான்.

என்னதான் நம் முகம் கலராகவும் பொலிவாகவும் இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.

முகப்பருக்களை அகற்றி சரும பொலிவிற்கு தீர்வு காண மருத்துவர் ரோமிகா சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.  

மருத்துவரின் கூற்று

01. தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நிம்மதியான உறக்கம் மிகவும் அவசியம்.

02. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்கவும்.

03. வியர்வை வரும்வரை தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யவும். 

04. நடைப்பயிற்சி முடிந்ததும் 200ml வெண்பூசணி அல்லது சுரைக்காய் ஜூஸ் குடிக்கவும்.

05. காலை உணவாக முளைகட்டிய பயிறு, வேகவைத்த பயிறு மற்றும் பழங்களின் சாறு, காய்கறிகளின் சாறு போன்றவை குடிக்கலாம்.

06. மதிய பொழுதில் உணவு உண்ட பின் படுத்திருப்பது, தூங்குவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

07. மேக்கப் பொருட்கள், பேஸ்வாஷ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இரவு தூங்கும்பொழுது சீரம் போன்றவை முகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

08. துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

09. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். குளிர்ந்த நீரை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

10. தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.

இரவு உணவை 7- 8 மணிக்குள் சாப்பிடுவது அவசியம். சாப்பிட்ட பின்பும் உறங்குவதற்கும் இடையில் 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.