ஆபத்தான நோய்களை வரவைக்கும் மலச்சிக்கல்.

பொதுவாக மலச்சிக்கலானது நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் இந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அந்தவகையில் மலச்சிக்கல் பிரச்னையை போக்க மருத்துவர் ஷர்மிகா சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார். 

✅மருத்துவர் கூறும் விளக்கம்

1. காலை 6 மணிக்கு 1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து பின் வெதுவெதுப்பான நீரை குடித்து வரலாம்.

2. காலை உணவாக பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

3. இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட பழகிக்கொள்ளுங்கள்.

4. தினமும் 5 நிமிடம் யோகா பயிற்சியில் மலாசனம் செய்யவும்.

5. வெதுவெதுப்பான நீரில் சப்ஜா விதைகளை கலந்து குடித்து வரலாம்.

6. வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வரலாம்.

7. நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவாக எடுத்துக்கொள்ளவும்.

8. மன அழுத்தம் இல்லமால் இருக்க வேண்டும். ஏனெனில் மலச்சிக்கலுடன் இது தொடர்புடையது.

9. நல்ல உறக்கம் அவசியம். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நன்றாக தூங்குங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.