உங்களுக்கு இளநரை இருக்கிறதா.?

இளநரை என்பது முன்பெல்லாம் 40 வயதைத் தாண்டும்போது வந்தது. ஆனால் தற்போது சிறு வயதிலிருந்தே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய உணவுமுறை, வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, பரம்பரை மற்றும் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள அதிகப்படியான இரசாயனங்கள் என்பவற்றினால் இளநரை ஏற்படுகின்றது.

இளநரை பிரச்சினை இருப்பவர்கள் வெள்ளை முடியை மறைக்க இரசானங்களை பயன்படுத்துகிறார்கள்.

அது மிக மிக ஆபத்தானது, தலைமுடியை மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதனால், சருமப் புற்றுநோய் முதல் பல்வேறு வகை புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் உண்டாகின்றன.

எனவே, இயற்கையான முறையில் எவ்வாறு முடியை கருப்பாக்கலாம் என்று பார்க்கலாம்.

கடுகு எண்ணையோடு வெந்தயப் பொடி சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

வெந்தயத்தின் சாறு முழுமையாக எண்ணெயில் இறங்கும்வரை சூடானதும் ஆறவைத்து நன்கு ஆறிய பிறகு வடிகட்டி ஒரு போத்தலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்த்து வர, முடி நன்கு கருமையாகவும் நீளமாகவும் வளருவதோடு இளநரையும் மறையும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.