பழங்களின் வாசனை புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும்!

பழங்களைச் சாப்பிட்டால் சில நோய்கள் குணமாகிவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், பழங்களின் வாசனையானது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதைத் தடுக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவர்கள் Histone deacetylases (HDAC) பயன்படுத்துகின்றனர். புற்றுநோய் செல்கள், neurodegeneration (பார்கின்சன், அல்சைமர் போன்றவை) நோய்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் HDAC பயனுள்ளதாக இருக்கும். 

இந்நிலையில், நன்கு பழுத்த பழங்களின் வாசனையும் HDAC மாதிரியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகளின் சோதனைகள் தெரிவிக்கின்றன.

பழத்தின் வாசனையை சுவாசிப்பது மரபணு வெளிப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இது தொடர்பாக இன்னும் பல பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், நீராவி மற்றும் நாற்றங்களை வெளிப்படுத்துவது போன்ற புதிய நடைமுறைகள் புற்றுநோய் செல்களை எந்த அளவிற்கு பாதிக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

மனிதர்களில் பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் புற்றுநோய்க்கான மருத்துவ சிகிச்சையில் இது முக்கியமானது என்று கூறப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.