உட்கார்ந்தே வேலை செய்பவர்களின் உடல் வலிக்கு தீர்வு இதுதான்.

வளர்ந்து வரும் களங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து கணினியில் வேலை பார்ப்பது அதிகரித்துவிட்டது.

Corporate, IT வேலைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது அவசியமாகும், இருக்கையில் ஒழுங்கான முறையில் அமர்ந்திருக்காவிட்டால் உடலுக்கு பல பின்விளைவுகள் ஏற்படும்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் உடல் வலிக்கான தீர்வு குறித்து மருத்துவர் சிவராமன் பகிர்ந்துள்ளார்.

மருத்துவர் கூறும் விளக்கம்

ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது, முதுகில் பாதிப்பை உண்டாக்கும். இதனால் முதுகில் தேய்மானத்தை அதிகரிக்கும்.

எனவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து உடற்பயிற்சி செய்தும் காய் கால்களை அசைத்து பின் வேலை செய்யலாம்.

தினசரி காலையில் எளிமையான யோகா பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம் போன்றவற்றை செய்யலாம்.

உணவில் புளிப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள கூடாது.

மேலும், குளிர்ச்சியான உணவுகள் மற்றும் மண்ணுக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது.

பிடி கருணை கிழங்கை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.