இந்த நோய்களை எல்லாம் அடித்து விரட்ட முருங்கைக்கீரை மட்டுமே போதும்

நம்மில் பலருக்கு கீரை என்றாலே விருப்பதகாத ஒன்று அதிலும் முருங்கை கீரை என்றாலே ஓடி ஒளிவதற்குதான் பார்போம்.

இந்த முருங்கைகீரையில் கல்சியம் , புரோட்டீன் , பீடா கரோடின், இரும்பு சத்து, விட்டமின் சி இப்படி பல வகையான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இவற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரியுமா?

✅நோய் அழற்சியை எதிர்த்து போராடும்

உடலில் நோய் அழற்சியை உண்டாக்கும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே எதிர்த்துப் போராடி சரி செய்யும். இதனால் புற்றுநோய், கீல்வாதம், முடக்கு வாதம் மற்றும் பல நோய்களுக்கு காரணமான அழற்சி நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

✅ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது 

நோய் தொற்று பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாப்பதில் முருங்கையிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆய்வில் 1.5 ஸ்பூன் அளவுக்கு முருங்கை இலை பவுடரை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர். அதோடு நீரிழிவு நோய், இதய பாதிப்பு , அல்சைமர் போன்ற பிரச்னைகளும் இருக்காது என்கின்றனர்.

✅இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நீரிழிவு நோய் உண்டாகிறது. இதனை சரி செய்ய முருங்கை இலையில் ஐசோதியோசயனேடுகள் (isothiocyanates) என்னும் பண்பு உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி நீரிழிவு நோயிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

✅கொழுப்பைக் குறைக்க உதவும்

உடல் பருமனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முருங்கை இலை கைக்கொடுக்கும். கொழுப்பு அதிகரிப்பால் இதய நோய்களும் வரும் எனவே உங்கள் டயட் பட்டியலில் முருங்கை இலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

✅கல்லீரலை பாதுகாக்கும் 

கல்லீரல் இரத்ததை சுத்தீகரித்து மெட்டாபாலிசத்தை அளிக்கிறது. இந்த வேலையை சிறப்பாக செய்ய கல்லீரலில் நொதிகள் உருவாகும். அந்த நொதி உருவாக்கத்திற்கு முருங்கை இலை பெரிதும் உதவுகிறது. எனவே முருங்கை இலையை தினமும் சாப்பிடுங்கள்.

✅வயிற்றுக்கு நல்லது

முருங்கையிலையில் நார்ச்சத்தும் நிறைவாக இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் வாயுத்தொல்லை இருக்காது. மலச்சிக்கல் இருக்காது. நெஞ்சு எரிச்சல், வயிற்று மந்தம், அல்சர் போன்ற பாதிப்புகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

✅எலும்புகளுக்கு உறுதி

முருங்கையிலையில் கால்சியம் சத்து நிறைவாக இருப்பதால் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கிறது. அதோடு பாஸ்பரஸ்சும் இருப்பதால் கூடுதல் உறுதி அளிக்கிறது. தொடர்ந்து முருங்கை இலை சாப்பிட்டு வர எலும்பு புரை பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.