வரலாற்றில் இன்று – 22.04.2024

ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டின் 112 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 113 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 253 நாட்கள் உள்ளன.

✅ இன்றைய தின நிகழ்வுகள்

238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப் பேஅரரசர்களாக அறிவித்தது.

1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார்.

1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட சரகோசா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது..

1809 – ஆத்திரிய இராணுவம் நெப்போலியன் தலைமையிலான முதலாம் பிரஞ்சு பேரரசு இராணுவத்திடம் தோற்றது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெஞ்சமின் கிரியெர்சன் தலைமையில் நடு மிசிசிப்பியைத் தாக்கினர்.

1889 – நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரம் மற்றும் கத்ரி ஆகியவற்றில் கிட்டத்தட்ட 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.

1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படையினர் கியூபாவின் துறைமுகங்களை முற்றுகையிட்டு எசுப்பானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினர்.

1906 – 1906 இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஏதென்சு நகரில் ஆரம்பமானது.

1912 – உருசியாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை பிராவ்தா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது.

1915 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர நகரில் செருமனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது.

1930 – ஐக்கிய இராச்சியம், யப்பான், அமெரிக்கா ஆகியன நீர்மூழ்கிக் கப்பல் போர்முறையின் சீர்மை குறித்தான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் நியூ கினியின் ஜயபுர என்ற இடத்தில் தரையிறங்கினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: குரோவேசியாவில் ஜசெனோவாச் வதை முகாம் கைதிகள் சிறையுடைப்பில் ஈடுபட்டபோது 520 கைதிகள் கொல்லப்பட்டனர். 80 பேர் தப்பியோடினர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் பெர்லினில் எபெர்ஸ்வால்ட் நகரை இலகுவாகக் கைப்பற்றியதைக் கேள்வியுற்ற இட்லர் பதுங்கு அறையில் இருந்தவாறு தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, தற்கொலையே ஒரே வழியெனக் கூறினார்.

1946 – மலாயாவில் சப்பானின் ஆக்கிரமிப்பில் 5 ஆண்டுகளாக இருந்த இலங்கையரின் முதலாவது தொகுதியினர் கொழும்பு வந்து சேர்ந்தனர்.[1]

1948 – அரபு - இசுரேல் போர்: இசுரேலின் முக்கிய துறைமுக நகரான கைஃபா அரபுப் படைகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

1970 – முதலாவது புவி நாள் கொண்டாடப்பட்டது.

1972 – வியட்நாம் போர்: வியட்நாமில் அமெரிக்கக் குண்டுவீச்சுகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, லாஸ் ஏஞ்சலஸ், நியூயார்க் நகரம், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1977 – ஒளியிழை முதற்தடவையாக நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

1983 – இட்லரின் நாட்குறிப்புகள் கிழக்கு செருமனியில் கண்டுபிடிக்கப்பட்டதாக டேர் ஸ்டேர்ன் என்ற செருமனிய இதழ் அறிவித்தது. ஆனால் இக்குறிப்புகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டது.

1992 – மெக்சிக்கோவில் குவாதலகாரா என்ற இடத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 206 பேர் கொல்லப்பட்டு 500 பேர் வரையில் படுகாயமுற்றனர்.

1997 – அல்ஜீரியாவில் கெமிஸ்ரி என்ற இடத்தில் 93 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1997 – பெருவின் தலைநகர் லீமாவில் ஜப்பானிய தூதுவர் இல்லத்தில் 126 நாட்களாகப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 71 பேர் அரசுப் படைகளின் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

2000 – ஆனையிறவு படைத்தளம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

2004 – வட கொரியாவில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 150 பேர் உயிரிழந்தனர்.

2005 – யப்பானியப் பிரதமர் ஜூனிசிரோ கொய்சுமி யப்பானின் போர்க்கால நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கேட்டார்.

2006 – நேபாளத்தில் மன்னருக்கெதிராக கலகத்தில் ஈடுபட்ட மக்களாட்சிக்கு ஆதரவானோர் மீது காவல்துறையினர் சுட்டதில் 243 பேர் காயமுற்றனர்.

2006 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

2014 – காங்கோவில் கட்டாங்கா மாகாணத்தில் தொடருந்து விபத்து ஒன்றில் 60 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

2016 – புவி சூடாதலைத் தவிர்ப்பதற்கான உதவிகள் குறித்த உடன்பாடு பாரிசு நகரில் எட்டப்பட்டது.

✅ இன்றைய தின பிறப்புகள்

1451 – முதலாம் இசபெல்லா, எசுப்பானிய அரசி (இ. 1504)

1724 – இம்மானுவேல் காந்து, செருமானிய மெய்யியலாளர், மானிடவியலாளர் (இ. 1804)

1870 – விளாதிமிர் லெனின், உருசிய பொதுவுடமைத் தலைவர், சோவியத் ஒன்றியத்தை நிறுவியவர் (இ. 1924)

1891 – அரோல்டு ஜெப்ரீசு, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1989)

1899 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய எழுத்தாளர் (இ. 1977)

1902 – அ. இராகவன், தமிழக நுண்கலை ஆய்வாளர், எழுத்தாளர் (இ. 1981)

1904 – ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1967)

1909 – ரீட்டா லெவி மோண்டால்சினி, நோபல் பரிசு பெற்ற யூத-இத்தாலிய மருத்துவர் (இ. 2012)

1916 – எகுடி மெனுகின், அமெரிக்க-சுவிட்சர்லாந்து வயலின் கலைஞர் (இ. 1999)

1931 – குலதெய்வம் ராஜகோபால், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர் (இ. 1992)

1935 – பாமா ஸ்ரீநிவாசன், இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர்

1937 – ஜேக் நிக்கல்சன், அமெரிக்க நடிகர்

1940 – க. சட்டநாதன், ஈழத்து எழுத்தாளர்

1945 – கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்கத்தின் 22வது ஆளுநர்

1952 – கம்லா பெர்சாத் பிசெசார், திரினிடாட் டொபாகோ குடியரசின் 7வது பிரதமர்

1962 – ஜெயமோகன், தமிழக எழுத்தாளர்

1971 – எரிக் மபியுஸ், அமெரிக்க நடிகர்

1982 – காகா, பிரேசில் கால்பந்து வீரர்

✅ இன்றைய தின இறப்புகள்

296 – காயுஸ் (திருத்தந்தை)

1616 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1547)

1778 – ஜேம்சு ஆர்கிரீவ்ஸ், பிரித்தானியக் கண்டுபிடிப்பாளர் (பி. 1720)

1866 – மத்வேய் கூசெவ், உருசிய வானியலாளர் (பி. 1826)

1942 – சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழகத் திரைப்பட வெளியீட்டாளர், தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1883)

1989 – எமீலியோ சேக்ரே, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1905)

1994 – ரிச்சர்ட் நிக்சன், அமெரிக்காவின் 37வது அரசுத்தலைவர் (பி. 1913)

2002 – எஸ். டி. சிவநாயகம், இலங்கை பத்திரிகையாளர், எழுத்தாளர்

2002 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை (பி. 1949)

2004 – கந்தர்வன், தமிழக எழுத்தாளர், கவிஞர், தொழிற்சங்கவாதி (பி. 1944)

2013 – லால்குடி ஜெயராமன், தமிழக வயலின் இசைக்கலைஞர் (பி. 1930)

2020 – ஏ. ரகுநாதன், ஈழ-பிரான்சிய நாடகக் கலைஞர்

✅ இன்றைய தின சிறப்பு நாள்

புவி நாள்

கண்டுபிடிப்பு நாள் (பிரேசில்)

பெரும் இன அழிப்பு நினைவு நாள் (செர்பியா)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.