வரலாற்றில் இன்று – 23.04.2024

ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டின் 113 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 114 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 252 நாட்கள் உள்ளன.

✅ இன்றைய தின நிகழ்வுகள்

1014 – அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார்.

1016 – எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

1343 – எசுத்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.

1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1639 – புனித ஜார்ஜ் கோட்டை சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது.

1655 – ஆங்கிலோ-எசுப்பானியப் போரின் போது சாந்தோ தொமிங்கோ மீதான தாக்குதல் ஆரம்பமானது, எனினும் ஏழு நாட்களில் இது தோல்வியடைந்தது.

1660 – சுவீடன், மற்றும் போலந்து ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.

1661 – இரண்டாம் சார்லசு இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடி சூடினார்.

1815 – உதுமானியப் பேரரசுடன் செர்பியா இணைக்கப்பட்டதை அடுத்து செர்பியர்களின் இரண்டாவது புரட்சி ஆரம்பமானது.

1867 – சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.

1879 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தின் கட்டடம் ஒன்று தீயில் எரிந்து சேதமடைந்தது.

1905 – யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.[1]

1932 – நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.

1940 – மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் உயிரிழந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்க முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதென்ஸ் நகரை விட்டு வெளியேறினார்

1945 – இரண்டாம் உலகப் போர்: எர்மன் கோரிங் நாட்சி ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு அனுமதி கேட்டு இட்லருக்குத் தந்தி அனுப்பினார்.

1949 – சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அமைக்கப்பட்டது.

1966 – முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.

1967 – சோவியத்தின் சோயுஸ் 1 விண்கலம் விளாதிமிர் கொமொரோவுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்குப் பாக்கித்தானில் (இன்றைய வங்காளதேசம்) ஜதிபாங்கா என்ற இடத்தில் 3,000 இற்கும் அதிகமான இந்துக்களைக் கொன்றனர்.

1987 – ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1990 – நமீபியா ஐநாவில் 160-வது உறுப்பு நாடாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 50வது உறுப்பு நாடாகவும் சேர்க்கப்பட்டது.

1993 – இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.

1993 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

1993 – எரித்திரியாவில் ஐநாவின் கண்காணிப்பில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.

1997 – அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற இடத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2005 – முதலாவது யூடியூப் காணொளி "ஜாவெட்" என்பவரால் வெளியிடப்பட்டது.[2]

2013 – ஈராக்கில் அவீஜா நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 28 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.

2018 – கனடா, தொராண்டோவில் வாகனம் ஒன்று நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.[3]

✅ இன்றைய தின பிறப்புகள்

1628 – ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (இ. 1704)

1791 – ஜேம்ஸ் புகேனன், ஐக்கிய அமெரிக்காவின் 15வது அரசுத்தலைவர் (இ. 1868)

1827 – எ. ஆ. கிருட்டிணப் பிள்ளை, கிறித்தவத் தமிழ்ப் புலவர் (இ. 1900)

1858 – மேக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1947)

1858 – ராமாபாய், இந்தியப் பெண்ணுரிமைப் போராளி, சமூக சீர்திருத்தவாதி (இ. 1922)

1876 – எஸ். குமாரசாமி ரெட்டியார், தமிழக அரசியல்வாதி

1895 – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, பிரித்தானியப் படைத்துறை அதிகாரி (இ. 1967)

1896 – திமீத்திரி மக்சூத்தொவ், சோவியத் உருசிய வானியலாளர் (இ. 1964)

1902 – ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின், நோபல் பரிசு பெற்ற ஐசுலாந்து எழுத்தாளர் (இ. 1998)

1906 – குத்தூசி குருசாமி, தமிழகப் பெரியாரிய அறிஞர், எழுத்தாளர் (இ. 1965)

1935 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (இ. 2009)

1935 – காக்கநாடன், மலையாள எழுத்தாளர் (இ. 2011)

1938 – எஸ். ஜானகி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1949 – போல் கொலியர், ஆங்கிலேய பொருளியலாளர்

1972 – தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 2015)

1977 – ஜான் சீனா, அமெரிக்க மற்போர் வீரர்

1977 – கால் பென், குஜராத்தி-அமெரிக்க நடிகர்

1990 – தேவ் பட்டேல், ஆங்கிலேய நடிகர்

2018 – கேம்பிரிட்ச் இளவரசர் லூயி

✅ இன்றைய தின இறப்புகள்

303 – புனித ஜார்ஜ், உரோமை இராணுவ வீரர் (பி. 275)

1200 – சூ சி, சீன மெய்யியலாளர் (பி. 1130)

1616 – வில்லியம் சேக்சுபியர், ஆங்கிலேயக் கவிஞர், நடிகர், எழுத்தாளர் (பி. 1564)

1850 – வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1770)

1923 – சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று ஆய்வாளர் (இ. 2002)

1958 – நட் உலுண்ட்மார்க், சுவீடிய வானியலாளர் (பி. 1889)

1973 – தீரேந்திர வர்மா, இந்திக் கவிஞர், மொழியியல் ஆய்வாளர் (பி. 1897)

1992 – சத்யஜித் ராய், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1921)

1992 – சி. வடிவேலு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1929)

1993 – லலித் அத்துலத்முதலி, இலங்கை அரசியல்வாதி (பி. 1942)

1997 – லீலாவதி, தமிழக இடதுசாரி அரசியல்வாதி

1999 – எம். வி. ராஜம்மா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1921)

2007 – போரிஸ் யெல்ட்சின், உருசியாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1931)

2009 – ரூபராணி ஜோசப், இலங்கை மலையக எழுத்தாளர்

2012 – அப்பச்சன், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1925)

2013 – சம்சாத் பேகம், இந்திப் பின்னணிப் பாடகி (பி. 1919)

✅ இன்றைய தின சிறப்பு நாள்

உலகப் புத்தக நாள்

ஐநா ஆங்கில மொழி நாள்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.