ஒரே வாரத்தில் முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரு எண்ணெய் போதும்

பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.

ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் ஒரே வாரத்தில் முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த மூன்று பொருட்கள் போதும். 

✅தேவையான பொருட்கள்

👉வெந்தயம்- 1 ஸ்பூன்

👉கறிவேப்பிலை- 3 கைப்பிடி

👉தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்

✅செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

தேங்காய் எண்ணெய் கொதித்து வந்ததும் அதில் அரைத்த வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் நினைக்க கொதித்து நிறம் மாறி வந்ததும் அதனை ஆறவைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து 2 மணி நேரத்திற்கு பின் ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.