தர்பூசணி சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்து உங்களுக்கு தான் - உஷார்!

 

கோடை காலம் வந்துவிட்டாலே அனல் காற்றும், வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்து வரும். அதில் இருந்து விடுப்பட்டு இருப்பதற்காக பலரும் நாடுவது தர்பூசணியை தான்.

இப்போது தர்பூசணி கோடை வெப்பத்தை வெல்ல மலிவான விலையில் சந்தைகளில் கிடைத்து வருகிறது. கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்க மக்கள் தர்பூசணியை அதிகம் சாப்பிடுவார்கள்.

இதில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. அதே நேரத்தில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

குறிப்பாக கூற வேண்டுமென்றால், தர்பூசணி ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளை அளிக்கும். ஆனால் தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதும் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

✅தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

நீரிழிவு நோயாளிகள் அதிகமாக தர்பூசணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி நீங்கள் அதிக அளவில் சாப்பிட்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். 

தர்பூசணியில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். நீங்கள் அதிக பொட்டாசியத்தை உட்கொண்டால் அது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

தர்பூசணியில் அதிக அளவு உணவு நார்ச்சத்து உள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தர்பூசணியில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், அதை அதிகமாக உட்கொண்டால், அதிகப்படியான நீரேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது உங்கள் உடலில் உள்ள நீரின் அளவை அதிகரித்து சோடியத்தின் அளவைக் குறைக்கும். எனவே வீக்கம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.