ஊற வைத்த திராட்சை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

உலகிலேயே அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று உலர் திராட்சை. இதனை கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பழம் என பல பெயர்களிலும் அழைப்பார்கள். நாம் வழக்கமாக சக்கரைப் பொங்கலுக்கு பயன்படுத்துவோமே, அதே பழம்தான்.

இந்தப் பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதனால்தன் பலரும் இதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுகிறார்கள்.

ஊற வைத்த உலர் திராட்சையில் விட்டமின், மினரல், நார்ச்சத்து என நம் உடலை பல வழிகளிலும் மேம்படுத்தக் கூடிய பல வகையான ஊட்டச்சத்துகள் உள்ளது.

இதற்கு முன் இதை சாப்பிடாமல் இருந்தீர்கள் என்றால், இனி உங்கள் டயட்டில் உலர் திராட்சை சேர்த்துக் கொண்டு, அதை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை தினசரி குடியுங்கள். உலர் திராட்சை ஊறை வைத்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் பற்றி பார்ப்போம்.

✅வயிற்று பிரச்சனைகளையும் தடுக்கிறது 

உலர் திராட்சை நீரை குடிப்பதால் பல வயிற்று பிரச்சனைகளை சரி செய்யலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நமது குடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு குடலில் உள்ளபாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பது உங்கள் செரிமான அமைப்பிற்கு மிகவும் நல்லது.

✅நச்சுகளை வெளியேற்றுகிறது 

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றி ரத்தத்தை தூய்மைபடுத்துகிறது. குறைந்தது ஒரு வாரம் இந்த நீரை குடித்தால், இதய நோய் வரும் ஆபத்து குறையும். அதோடு உங்கள் கல்லீரலையும் சுத்தபடுத்தி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்

✅நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 

உலர் திராட்சை ஊற வைத்த நீரில் அதிகளவு அண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பல நோய்களிலிருந்து உங்களை காக்கிறது. அதோடு உங்களின் செரிமான ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.

✅முடி உதிர்வை தடுக்கிறது 

முடி உதிர்வை எப்படி தடுப்பது என பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உலர் திராட்சை இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். உலர் திரட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.

✅தூக்கமின்மை பிரச்சனையை போக்குகிறது 

இன்றைய காலத்தில் பலரும் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, இதிலிருக்கும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான மெலடோனின் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையை தடுத்து உங்களுக்கு நல்ல தூகத்தை வரவழைக்கிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.