முகத்தை மிளிர வைக்க இந்த ஒரு மா போதும்

இயற்கையான முறையில் முகம் மற்றும் உடலை பளபளப்பாகவும் பொலிவாகவும் மாற்ற கடலை மா ஒன்று பதும்.

அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கடலை மா பேக் பயன்படுத்தி வர முகம் வெள்ளையாகவும் , பொலிவாகவும் இருக்க உதவுகின்றன. 

✅தேவையான பொருட்கள்

கடலை மா- 2 ஸ்பூன்

கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

✅தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதில் புதிதாக பிழிந்த கற்றாழை ஜெல் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவும் பதத்திற்கு செய்து கொள்ளவும்.

இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் 30 நிமிடங்கள் விட்டு பின் தண்ணீர் தடவி ஸ்க்ரப் போல் பயன்படுத்தலாம்.

பிறகு முகத்தை நன்றாக சுத்தம் செய்து மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதன் மூலம் சருமம் மென்மையாக இருக்கும்.

✅தேவையான பொருட்கள்

👉கடலை மா- 2 ஸ்பூன்

👉தேன்- 2 ஸ்பூன்

✅தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் தேன் கலந்து அதில் 5 முதல் 6 சொட்டு ரோஸ் வாட்டரை கலக்கவும்.

இந்த கலவையில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்து முகத்திலும் தடவவும்.

சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விட்டு பிறகு தண்ணீரால் முகத்தை சுத்தம் செய்யவும். இது உங்கள் சருமத்தை மென்மையாக மாற்றும்.

வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பேக்கை பயன்படுத்தி வர சருமம் பொலிவாக மாறும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.