தினமும் காலை சுடு நீர் குடிப்பதால் உடலில் இத்தனை நன்மைகளா?

கோடைக்காலத்தில் மட்டுமே நம்மில் எல்லோரும் தண்ணீரை தேடுவோம். ஆனால் நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை உட்கொள்வது சிறந்ததாக அமையும் அதிலும் தினமும் வெந்நீரை குடித்தால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை தரும். 

அந்த வகையில் தினமும் வெந்நீர் குடிப்பதால் என்னென்ன நன்மை கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.

✅எடை இழப்பு

மிக எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அதில் வெந்நீர் உட்கொள்வதும் ஒன்று. இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. வெந்நீர் மூலம் உடல் எடையை குறைப்பதால் எந்த செலவும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் எளிதாக பராமரித்து, உடல் எடையையும் குறைக்க முடியும்.

✅மன அழுத்தம்

வெந்நீர் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் உதவியாகக் கருதப்படுகிறது. மன அழுத்தம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது. இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும்.

✅செரிமானம்

மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பவர்களுக்கு உணவு எளிதில் ஜீரணமாகாது.

✅இரத்த ஓட்டம்

வெந்நீர் அருந்துவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வந்தால், அது நம் உடலின் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. 

✅சளி மற்றும் இருமல்

சளி மற்றும் இருமலின் போது வெந்நீரை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது தொண்டைக்கு நிறைய நிவாரணம் அளிக்கிறது. இது சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.