மீதொட்டமுல்லையில் மீத்தேன் வாயு அதிகரிப்பு – ஜப்பான் நிபுணர்கள் தெரிவிப்பு

ஜப்பான் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய, இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலநடுக்கம், மண்சரிவு, வாயு தொடர்பான விசேட நிபுணத்துவமிக்க 12 உறுப்பினர்கள் கொண்ட விசேட குழுவினர் மீதொட்டமுல்ல குப்பை மேட்டை நேற்று கண்காணித்தனர்.

அவர்களின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த பகுதியை 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கண்காணித்ததின் பின்னர், அவர்களின் முதற்கட்ட தீர்மானங்களை பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவித்தனர்.

மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.நுகேரா தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜப்பான் குழுவினரின் முதற்கட்ட கண்காணிப்பிற்கு அமைய, பிரதேசத்தில் மீத்தேன் வாயு 16 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், தீயைப் பற்றவைக்கக்கூடிய பொருட்களின் பாவனையை தவிர்க்குமாறும் இக்குழுவினர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

மீத்தேன் வாயு காற்றுடன் கலந்துள்ளமையால் குப்பைமேட்டின் கீழ் பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இக்குழுவினர் தெளிவூட்டவுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.