சிக்சர் விளாசும் போட்டி: ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து டோனி அசத்தல்


டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவான சிக்சர் விளாசும் போட்டியில் டோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று நடக்கிறது. இந்த தொடரின் தொடக்க விழாவாக சிக்சர் விளாசும் போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி, மோகித் ஷர்மா, பத்ரிநாத், பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழ்நாடு பேட்ஸ்மேன் அனிருத் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டர்.

மெஷின் மூலம் வீசப்படும் பந்தை சிக்சருக்கு விளாசுவதுதான் இந்த சிக்ஸ் விளாசும் போட்டி. முதல் நபராக ஹெய்டன் சிக்ஸ் அடிக்க களம் இறங்கினார். அவர் முதல் பந்தை தவிர மற்ற இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார்.

அடுத்து வந்த நெஹி சிக்ஸ் அடிக்கவில்லை. அனிருத் ஸ்ரீகாந்திற்கு சரியாக பந்துகள் அமையவில்லை. அதன்பிறகு மெஷினில் டோனி பந்தை வைத்தார். இதில் மூன்று சிக்ஸ் விளாசினார்.

இறுதியாக டோனி களம் இறங்கினார். டோனி தான் சந்தித்த மூன்று பந்துகளையும் அதிக தூரத்திற்கு சிக்சர்களாக விளாசி அசத்தினார்.

போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் கூடியிருந்த சி.எஸ்.கே. ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஜெர்ஸி வழங்கினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.