திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

 திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு


திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (23) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா – வான் எல பகுதியைச் சேர்ந்த சுக்கூர் றயான் (16 வயதுடைய ) சிறுவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த இளைஞர் சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ முகாமுக்கு முன்னால் போடப்பட்டிருந்தது

கம்பியில் சிக்குண்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.