பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட கோரிக்கை!

 பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட கோரிக்கை

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு சுகாதார பரிந்துரைகளை கோரியுள்ளது.

பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை எழுத்துமூலம் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இணையத்தளம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளது.

இணையத்தள வசதிகளற்ற மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில் 10 ஆயிரத்து 164 பாடசாலைகளில் சுமார் 4 தசம் 5 மில்லியன் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.