கொரோனா அச்சம் நாடாளுமன்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு பூட்டு.

 கொரோனா அச்சம் நாடாளுமன்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு பூட்டு.

நாடாளுமன்றம் இன்றும் (26) நாளையும் மூடப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த இரு தினங்களிலும் நாடாளுமன்ற ஊழியர்கள் எவரும் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை என்று ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சுற்றாடலில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் பணியாற்றும் ஸ்ரீஜயவர்தனபுர அதிரடிப்படை முகாமில் ஒருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதனையடுத்தே நாடாளுமன்றத்தை இரு தினங்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.