நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி


நாட்டில் நேற்றைய தினம் 457 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

நேற்று மாலை 293 கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இரவில் 164 பேருக்கு தொற்றுறுதியானது.

அவர்களில் 447 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

10 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஆகிய கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தற்போது நாடு முழுவதிலும் கொவிட் 19 நோய்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 870 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கொவிட்-19 பரவல் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் நேற்று முன்தினம் 116 ஆவது இடத்தில் பதிவாகியிருந்த இலங்கை, நேற்றைய தினம் 114 ஆவது இடத்தில் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் நேற்றையதினம் 110 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 4 ஆயிரத்து 43 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்திருக்கின்றனர்.

அத்துடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.