பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

நாட்டை முழுமையாக முடக்கக் கூடாது எனில், அதிக அபாயமுள்ள பகுதிகளில் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுபடுத்தப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்றில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 80 வீதம் வரை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமெனில், அதிக ஆபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே பெறப்பட்ட சுமார் 20 ஆயிரம் PCR பரிசோதனை மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனவும், அவற்றை விரைவாக பரிசோதனைக்கு உட்படுத்தாத பட்சத்தில், உரிய பெறுபேறுகளைப் பெற்றுக் முடியாது போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றின் தாக்கம் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் சீரான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் தாம் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.