மத்திய மாகாணத்தில் 113 பேருக்கு கொரோனா!

மத்திய மாகாணத்தில் 113 பேருக்கு கொரோனா!

மத்திய மாகாணத்தில் கடந்த 2ஆம் திகதிவரை 113 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மாத்தளை மாவட்டத்தில் அரச வைத்திய அதிகாரி உட்பட சுகாதாரப் பிரிவின் உத்தியோகத்தர் குழுவைச் சேர்ந்த 05பேரும் உள்ளடங்குவதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் சுமார் 8113 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களில் 4099 பேர் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் 4014 பேர் வரையில் சுய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

லக்கல கொரோனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 51பேர் சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தற்பாேது 49பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் சந்தேகத்திற்கிடமான 1092 பேர் வரையில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் அரைவாசிக்கு மேற்பட்டோரின் பி.சீ.ஆர் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கையின் முடிவுகளின் பிரகாரம் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனவும் மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.