கொரோனா தொற்று தொடர்பான உண்மை தரவுகளை அரசாங்கம் மறைக்கின்றது...

 கொரோனா தொற்று தொடர்பான உண்மை தரவுகளை அரசாங்கம் மறைக்கின்றது...




நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான உண்மை யான நிலைமையை மக்களிடமிருந்து மறைக்க அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.


அதன்படி ,சமூகத்தில் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் சமூக ரீதியாகப் பரவவில்லை என அரசாங்கம் அறிக்கை யில் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக இந்நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது,


கொரோனா தொற்று காரணமாகத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நகரம் மற்றும் கிராமங்களிலுள்ள இளைஞர், யுவதிகள் முழுமையாக அநாதையாக்கப்பட்டுள்ளார்கள். தொழிலை இழந்த நிலையில் அவர்கள் உட்கொள்ள உணவு இல்லை, அவர்கள் தங்கி இருந்த விடுதிகளுக்குச் செலுத்தப் பணம் இல்லை , முதலாளிமார்கள் குறித்த விடுதியிலிருந்து யுவதி , இளைஞர்களை அகற்ற முயற்சிக்கிறார்கள்.


மேலும் ,அரசாங்கம் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு பொதுமக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.