வரலாற்றில் இன்று

 வரலாற்றில் இன்று 

நவம்பர் 3 (November 3) கிரிகோரியன் ஆண்டின் 307 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

👉644 – இரண்டாவது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.

👉1493 – கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.

👉1655 – பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவப் பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

👉1793 – பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கஸ் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

👉1812 – நெப்போலியனின் இராணுவத்தினர் வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.

👉1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

👉1903 – ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

👉1905 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டான்.

👉1913 – ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

👉1918 – போலந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் வில்ஹெம்ஷாஃபென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

👉1957 – உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.

👉1963 – தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

👉1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

👉1964 – வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

👉1970 – சல்வடோர் அலெண்டே சிலியின் அதிபரானார்.

👉1973 – நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

👉1978 – டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

👉1979 – கம்யூனிச பாட்டாளிகள் கட்சியில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

👉1982 – ஆப்கானிஸ்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

👉1986 – மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

👉1988 – இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

👉1618 – ஔரங்கசீப், இந்தியாவின் மொகாலய சக்கரவர்த்தி, (இ. 1707).

👉1795 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர் (இ. 1849)

👉1911 – ஏ. கே. செட்டியார், தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. 1983)

👉1933 – அமர்த்தியா சென், இந்தியப் பொருளாதார நிபுணர், நோபல் பரிசு பெற்றவர்

👉1932 – அன்னை பூபதி, மட்டக்களப்பில் இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1988)

இறப்புகள்

👉1639 – மார்டின் தெ போரஸ், பெரு நாட்டுப் புனிதர் (பி. 1579)

👉1954 – ஆன்றி மட்டீசு, பிரெஞ்சு ஓவியர் (பி. 1869)

👉1957 – லைக்கா, சோவியத் நாய் (பி. 1954)

👉2006 – ஈ. வி. சரோஜா, தமிழ்த் திரைப்பட நடிகை, (பி. 1935).

👉2012 – ஜார்ஜ் செஸ்டர்டன், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (பி. 1922)

சிறப்பு நாள்

👉பனாமா – விடுதலை நாள் (1903)

👉டொமினிக்கா – விடுதலை நாள் (1978)

👉மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் – விடுதலை நாள் (1986)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.