இன்றைய கவிதை வரிகள்

இன்றைய கவிதை வரிகள்



மனிதர்களின் குணங்களில் மன்னித்து விடுவது என்பது மிகச்சிறந்த ஒன்று

மன்னித்து விடுபவர்களின் வாழ்க்கை மிக அழகாக இருக்கும்

மன்னிப்பவர்கள் எப்போதும் தவறு செய்பவர்களின் 

சூழ்நிலையிலிருந்து யோசிப்பார்கள்

தவறுகளில் இருந்து மீண்டு வந்து இன்று சரியான வாழ்க்கை வாழ்கிற பலர்

சிலரால் மன்னிக்கப்பட்டவர்கள்

மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள்

தவறை திரும்ப செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் மன்னிப்பை வழங்குகிறார்கள்

திரும்பத் திரும்ப அதே தவறை செய்பவர்கள் திருந்த மாட்டார்கள்

ஏனென்றால் அவர்களுக்கு திரும்பத்திரும்ப வழங்கப்பட்ட மன்னிப்பு பழகி விட்டது

மன்னிப்புக்கு ஒரு அளவு உண்டு

ஒரே தவறுக்கு திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டிருந்தால் 

திரும்பத் திரும்ப அதே தவறை செய்வதற்கு மன்னிப்பதே தூண்டிவிடும்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.