டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கும் கொரோனா?

டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கும் கொரோனா?

மனிதர்கள் பயன்படுத்திய கழிவு நீர் கடலில் கலப்பதால் டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி கனடாவிலுள்ள டல்ஹௌசி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கடல் பாலூட்டிகளில் நடத்திய ஆய்வில், ”கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய நீர் கடலில் கலப்பதால் கடல் பாலூட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த ஆய்வில் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சார்ஸ் கோவி 2 (SARS-CoV-2)என்ற வைரஸால் கடல் பாலூட்டிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வகையில் இக் கொரோனாத் தொற்றானது டொல்பின்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.