நான்கு பிள்ளைகளின் தந்தையை பந்தாடிய மோட்டார் சைக்கிள்! வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு

நான்கு பிள்ளைகளின் தந்தையை பந்தாடிய மோட்டார் சைக்கிள்! வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில்,

துவிச்சக்கர வண்டியில் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கந்தளாய் பேராற்றுவெளி பகுதியைச் சேர்ந்த முகம்மட் நஜீப் 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் நகரிலிருந்து வீட்டுக்குச் துவிச்சக்கர வண்யில் சென்ற ஒருவரே வீதியியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்தியவரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.