மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது

 மேல் மாகாணத்தில் 1,120 பேர் கைது.


 மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,120 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று (28) காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு இடையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 47 பேரும், நீதிமன்றதை புறக்கணித்து வந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 418 பேரும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 549 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.