ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இலங்கையைக் கண்காணிக்கும் பணியைத் தொடங்குகிறது... இலங்கையில் பணிபுரிவதற்காக, 12 பேரை நியமிக்கிறது.

 ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இலங்கையைக் கண்காணிக்கும் பணியைத் தொடங்குகிறது... இலங்கையில் பணிபுரிவதற்காக, 12 பேரை நியமிக்கிறது.


இலங்கை தொடர்பாக ஆராய, ஐக்கிய நாடுகள் மனித

 உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால், சட்ட ஆலோசகர்களும் புலனாய்வாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

இலங்கை தொடர்பான தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், இலங்கையைக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அதன்படி, இலங்கையில் பணிபுரிவதற்காக, 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அவர்களில், சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து, தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் உத்தியுடைய ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் ஆதரவு அதிகாரிகள், இவ்வனைவரையும் மேற்பார்வை செய்வதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் ஆகியோரையே நியமிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.