கத்தோலிக்க தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் – 14 பேர் காயம்.

 கத்தோலிக்க தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் – 14 பேர் காயம்.


இந்தோனேஷியா – மகாசர் பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டுத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கத்தோலிக்க தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலே நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த தற்கொலை குண்டுத்தாரி, தேவாலயத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், கதவுக்கு அருகிலேயே குண்டு வெடித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுகிழமை ஆராதனைகளை இலக்கு வைத்தே இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.