பதினாறு வயது பாடசாலை மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு..15 வயது பாடசாலை மாணவர்கள் இருவர் கைது...!
பதினாறு வயது பாடசாலை மாணவி மீது கூட்டு பாலியல் வல்லுறவு..15 வயது பாடசாலை மாணவர்கள் இருவர் கைது...!
பதினாறு வயது பாடசாலை சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 15 வயது மாணவர்கள் இருவரை கடந்த 24 ம் திகதி கைது செய்துள்ளதாக கெக்கிராவ பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களாவர்.
சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இரு மாணவர்களும் ஒரே பாடசாலையில் கல்வி கற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம வயதுடைய அதே பாடசாலையில் கல்வி கற்கும் சிறுமியின் காதலன் என கூறப்படும் ஒரு மாணவனுடன் சிறுமி வகுப்பறையில் தனியாக உறையாடிக் கொண்டிருந்த வேளையில் சந்தேக நபர்களான மாணவர்கள் இருவரும் தங்களின் கையடக்க தொலைபேசி மூலம் அந்த சிறுமியை படம் எடுத்துள்ளனர்.
பின்னர் அதனை சிறுமியிடம் காட்டி பாடசாலை அதிபருக்கும் பெற்றோரோருக்கும் காட்டுவதாக கூறி அச்சுறுத்தி சிறுமியைஅழைத்துச் சென்றுள்ளதாகவும் அந்தப் பயணத்தில் மற்றய சந்தேக நபரும் இணைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் சந்தேக நபர்கள் இருவரும் சிறுமியை கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களான இரு மாணவர்களையும் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.