எகிப்து நாட்டின் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து– 20 பேர் இதுவரை உயிரிழப்பு.

எகிப்து நாட்டின் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து– 20 பேர் இதுவரை உயிரிழப்பு.



எகிப்தில் ஆடை உற்பத்தியகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலியாகினர். இது தொடர்பாக எகிப்தில் இருந்து வெளியாகும் அல் அஹ்ரம் செய்தித்தாளில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது.

வடக்கு எகிப்தின் அல் கலியுபியா மாகாணத்தின் அல் ஒபௌர் நகரத்தில் ஆடை உற்பத்தியகம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு வியாழனன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 பேர் பலியாகினர். மேலும் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 காயமடைந்தவர்கள உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தன.விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.