மட்டக்களப்பு - ஓட்டமாவடி பாதணி விற்பனை நிலைய ஊழியரிடம் மீட்கப்பட்ட 2,20,000 பெறுமதியான போலி நோட்டுக்கள்.

 மட்டக்களப்பு - ஓட்டமாவடி பாதணி விற்பனை நிலைய ஊழியரிடம் மீட்கப்பட்ட 2,20,000 பெறுமதியான போலி நோட்டுக்கள்.


மட்டக்களப்பு - ஓட்டமாவடியில் பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் 5,000 ரூபா பெறுமதியான 20 நோட்டுக்களை வைத்திருந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதுடன் நோட்டுக்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றைடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் குறித்த பாதணி விற்பனை நிலையம் ஒன்றைச் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த விற்பனை நிலையத்தில் பணி புரியும் ஒருவரிடமிருந்து 5,000 ரூபா கொண்ட 2,20,000 பெறுமதியான போலி நோட்டுக்களைக் கைப்பற்றியதுடன் சந்தேக நபரைக் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரை வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.