இத்தாலியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 இலட்சத்தை அண்மித்தது

 இத்தாலியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 இலட்சத்தை அண்மித்தது



இத்தாலியில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 இலட்சத்தை அண்மித்தது

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை அண்மித்துள்ளது.

இந்தநிலையில், கொவிட்-19 தொற்றுக்காரணமாக அங்கு இதுவரை 29 இலட்சத்து 99 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 339 பேர் பலியாகினர்.

இதற்கமைய அந்த நாட்டில் கொரோனா காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கமானது உலகின் பல நாடுகளில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3 ஆம் இடத்திலும் உள்ளது.

சர்வதேச ரீதியாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடதக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.