ஆபத்தான இடமாக பதுளை மருத்துவமனை! தடுப்பூசி போட்டவர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா.

 ஆபத்தான இடமாக பதுளை மருத்துவமனை! தடுப்பூசி போட்டவர்கள் உட்பட 31 பேருக்கு கொரோனா.


பதுளை மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மருத்துவர், மருத்துவமனை ஊழியர், 29 நோயாளிகள் என 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 2 ஆம் அங்கு பணியாற்றிய ஒரு செவிலியருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதை அடுத்து, மற்றொரு செவிலியர் மற்றும் இரண்டு பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பி.சி.ஆர் தகவல்கள் நேற்று உறுதிப்படுத்தின.

இதையடுத்து குறித்த வைத்தியசாலையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேலும் பதுளை மருத்துவமனையின் அதிகாரிகள் புற்றுநோய் சிகிச்சை பிரிவை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளனர்.

இதேவேளை வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.