எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து - 32 பேர் உயிரிழப்பு.

 எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து - 32 பேர் உயிரிழப்பு.


மத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக எகிப்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதுடன் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மூன்று கார்களும் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோஹாக் மாகாணத்தின் தஹ்தா மாவட்டத்தில் தலைநகர் கெய்ரோவிலிருந்து தெற்கே 460 கிலோமீற்றர் (285 மைல்) தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிக வேகத்தில் செல்லும்போதே ரயில்கள் மோதியுள்ள நிலையில், இரண்டு ரயில் பெட்டிகள் கடும் சேதமடைந்தும் மூன்றில் ஒரு பகுதி ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.