ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி சமகி ஜன பலவேகயவில் இணைந்த உறுப்பினர்கள் 44 பேர் மீண்டும் ஐ.தே.க வில் இணைந்தனர்.

 ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி சமகி ஜன பலவேகயவில் இணைந்த உறுப்பினர்கள் 44 பேர் மீண்டும் ஐ.தே.க வில் இணைந்தனர்.


ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட உள்ளூராட்சி மன்ற

உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவதற்கான வாய்ப்பை வழங்க ஐ.தே.க தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயற்குழு கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 44 பேர் ஐ.தே.க வில் இணைநதுள்ளனர் எனவும் 18 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.