பாராளுமன்ற அமர்வு இன்று தொடக்கம் 4 நாட்கள்.

 பாராளுமன்ற அமர்வு இன்று தொடக்கம் 4 நாட்கள்.


பாராளுமன்ற அமர்வு இன்று (23) மீண்டும் இடம்பெறுகின்றது.

சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் நிதியமைச்சரினால் விதிக்கப்பட்டுள்ள 2 ஒழுங்கு விதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் இன்று (23) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

மாலை 4.30 தொடக்கம் 5.30 வரையில் ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படவுள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதம் இடம்பெறுவுள்ளது.

இதேவேளை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.