இந்த ஆண்டும் இலங்கை முஸ்லிம்களுக்கு 75 மெற்ரிக்தொன், பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கியது சவூதி.
இந்த ஆண்டும் இலங்கை முஸ்லிம்களுக்கு 75 மெற்ரிக்தொன், பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கியது சவூதி.
இவ்வருட ரமழானுக்காக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்கு 75 மெற்ரிக்தொன் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இப்பேரீத்தம் பழங்கள் பள்ளிவாசல்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
கிடைக்கப்பெற்றுள்ள பேரீத்தம் பழங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் ஸ்டார் லங்கா மீடியா நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
கடந்த வருடம் இலங்கைக்கு நன்கொடையாக 150 மெற்ரிக்தொன் கிடைக்கப்பெற்தாகவும் தெரிவித்த பணிப்பாளர், இம்முறை அதில் அரைவாசியே கிடைத்துள்ளதாகவும் நோன்புக்கு முன்னர் இவற்றை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் கூறினார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.