மோட்டார் சைக்கிள்களை பரிசோதனை செய்யும் விசேட நடவடிக்கை இன்று ஆரம்பம்.

 மோட்டார் சைக்கிள்களை பரிசோதனை செய்யும் விசேட நடவடிக்கை இன்று ஆரம்பம்.


மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோர்களினால் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று தொடக்கம் 4 நாட்களுக்கு விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டர் சைக்கிளாளேயே இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், நேற்றைய தினம் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கில் நடை பாதையில் சென்ற இருவரும், மோட்டர் வாகனங்களை செலுத்திய மூவரும், வாகனங்களில் சென்ற மூவரும் உயிரிழந்துள்ளனர்.

வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது இந்த மோட்டர் சைக்கிள் பரிசோதனையாகும். மோட்டார் சைக்கிள்களில் சொல்வோரை சிரமத்துக்குள்ளாக்குவது இதன் நோக்கமல்ல. வீதி பாதுகாப்பே முக்கியமாகும். நாளாந்தம் விபத்துக்களினால் 3 தொடக்கம் 5 பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புக்களை தடுப்பதே எமது நோக்கமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.