கண்டியில் கொரொனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த பாடசாலை மாணவர் உயிரிழப்பு.

 கண்டியில் கொரொனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த பாடசாலை மாணவர் உயிரிழப்பு.


கொரொனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த நிலையில் இருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக குறித்த மாணவர் கண்டி - மெனிக்ஹின்ன வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மாணவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கவில்லை என சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, மொரவக்க மற்றும் தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேலும் 30க்கும் அதிகமான கொரொனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (16) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைய மொரவக்க சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இனங்காணப்பட்ட கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.