இரண்டாவது சோதனையில் தோல்வி.

 இரண்டாவது சோதனையில் தோல்வி.


எஸ்லடொக்சின் என்ற புற்றுநோய் பதார்த்தம் அடங்கியுள்ளதாக கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த நிறுவனமொன்று, அதன் இரண்டாவது தர ஆய்வில் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எஸ்லடொக்சின் குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக காணப்படுவதால் தர ஆய்வு அறிக்கை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, குறித்த நிறுவனத்திற்கு குறித்த எண்ணெய் தொகையை மீள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் மூன்று நிறுவனங்கள் தமது மாதிரிகளின் இரண்டாம் தர ஆய்விற்கு மேன்முறையீடு செய்துள்ள நிிலையில் அவற்றின் அறிக்கைகள் நாளை கிடைக்கப்பெறவுள்ளன. 

எஸ்லடொக்சின் என்ற புற்றுநோய் பதார்த்தம் அடங்கிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய்யின் மாதிரிகளின் மறு பரிசோதனை தற்போது பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 

இலங்கை தர நிர்ணய நிறுவனம், சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றால் இந்த மறு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இறக்குமதி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டுக்கு அமைவாக இவ்வாறு குறித்த மாதிரிகள் மறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.