நீதிமன்றத்தில் ஆஜரான ஹிருனிகா; விடுக்கப்பட்ட உத்தரவு.

 நீதிமன்றத்தில் ஆஜரான ஹிருனிகா; விடுக்கப்பட்ட உத்தரவு.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு விடுக்கப்பட்டிருந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் மீளப் பெற்றுள்ளது.

2015 ஆம் ஆண்டில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததன் காரணமாக, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இன்று காலை குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானமையை அடுத்து, அதனை கொழும்பு மேல் நீதிமன்றம் மீளப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்கை எதிர்வரும் ஜுன் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.