சஹ்ரானை வழிநடத்திய முக்கிய நபர் தொடர்பில் சரத் வீரசேகர வெளியிட்ட பல உண்மைகள்.

 சஹ்ரானை வழிநடத்திய முக்கிய நபர் தொடர்பில் சரத் வீரசேகர வெளியிட்ட பல உண்மைகள்.


இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், கட்டாரில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் முகமது நஃவுர் என்ற நபரால் வழிநடத்தப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சஹ்ரான் ஹாசிம் முதன்முதலில் 2017 இல் அலியார் பகுதியில் தாக்குதலை நிகழ்த்தினார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்த நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது உளவுத்துறை விசாரணைகளை மேற்கொண்டது.

இதில் அவர் பல ஆண்டுகளாக கட்டார் இராச்சியத்தில் இருந்த முகமது இப்ராஹிம் முகமது நஃவுர் என்ற நபருடன் தொடர்பு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இவர் மூலமாகவே சஹ்ரான் ISIS தலைவர் அபு பகர் அல் உடன் சஹ்ரான் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்.

முகமது இப்ராஹிம் முகமது நஃவுர் என்று அழைக்கப்படும் நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.