பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே வைத்து மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.

 பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே வைத்து மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.


காலி – உடுகம பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பெண் ஒருவர் மீது ஆசிட் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த பெண் காலி-கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாக அளிக்கப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போதே கணவனால் (32) மனைவி (28) மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இதன்போது பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்ததுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.