இறுதிப் போட்டிக்கு இலங்கை லெஜென்ட்ஸ் அணி தகுதி.

 இறுதிப் போட்டிக்கு இலங்கை லெஜென்ட்ஸ் அணி தகுதி.


ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா லெஜென்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜென்ட்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் குலசேகர 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 39 ஓட்டங்களையும் சிந்தக்க ஜெயசிங்க 47 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய இறுதிப்போட்டியில் இந்திய லெஜென்ட்ஸ் அணியும் இலங்கை லெஜென்ட்ஸ் அணியும் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.