நீதி அமைச்சரின் புர்கா தொடர்பான யோசனை - ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள கடும் எதிர்ப்பு.

 நீதி அமைச்சரின் புர்கா தொடர்பான யோசனை - ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள கடும் எதிர்ப்பு.


பொது இடங்களில் 'புர்கா' எனும் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதை சட்டத்தின் ஊடாக தடை செய்ப்படுவதை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எதிர்ப்பதாக அதன் உதவி செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் தெரிவித்தார்.

"குறித்த ஆடை அணிவதை சட்டத்தின் ஊடாக தடை செய்ய முயற்சிப்பது சமூகத்தின் உரிமையினை மீறும் செயலாகும்" என அவர் குறிப்பிட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்கள் முகத்தை மறைக்காததை எதிர்க்கவில்லை. எனினும் சட்டத்தின் ஊடாக நிகாப் அணிவதற்கு தடை விதிப்பது மனித உரிமை மீறலாகும் என அவர் கூறினார்.

அவ்வாறு சட்டத்தின் ஊடாக தடை கொண்டுவரப்படுமாயின் மனித உரிமையின் பார்வையில் இது முஸ்லிம் சமூகத்திற்கு சிறந்ததொன்றல்ல என அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாக எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி கலந்துரையாடலொன்றை ஏற்படு செய்துள்ளது எனவும் அவர் கூறினார்.

தற்போது அனைவரும் முகக்கவம் அணிவது நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளமையினால் இந்த தடை தொடர்பான விடயத்தினை முஸ்லிம் சமூத்தினால் இதுவரை உணரப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக புர்கா உள்ளிட்ட முகத்தினை மூடும் ஆடைகளை பொது இடங்களில் அணிவதை தடை செய்யும் வகையிலான முன்மொழிவொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.