ஏறாவூரில் குடும்ப தகராற்றினால் மனைவி, பிள்ளைகள் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி.

 ஏறாவூரில் குடும்ப தகராற்றினால் மனைவி, பிள்ளைகள் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி.


குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினால் மனைவி பிள்ளைகள் தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தாக்குடியிருப்பு பாரதி வீதியினைச் 38 வயதுடைய சேர்ந்த கணேஷ் குணராசா என்பவருக்கும் மனைவி பிள்ளைகளுக்கும் இடையில் நேற்று இரவு ஏற்பட்ட தகராற்றினால் மனைவி பிள்ளைகள் குறித்த நபரினை தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் க.ஜீவராணி சம்பவ இடத்தினை பார்வையிட்ட பின்னர் விசாரணைகளை மேற்கொள்ளும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.