சில அமைச்சர்கள் வாயை அடக்குங்கள்’ - ஜெனிவாவிலிருந்து வந்த உத்தரவு.
‘சில அமைச்சர்கள் வாயை அடக்குங்கள்’ - ஜெனிவாவிலிருந்து வந்த உத்தரவு.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்திய அசிட் மொழி பேசும் அமைச்சர்களின் வாயை அடக்குமாறு ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடபிரதிநிதி சந்திரபிரேமா அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
சரத் வீரசேகர உள்ளிட்ட அமைச்சர்கள் வெளியிட்ட சில தேவையற்ற அறிக்கைகள் காரணமாக இலங்கை சில நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும் என்று சந்திரபிரேமா தெரிவித்துள்ளார்.
புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கான நடவடிக்கை குறித்து சரத் வீரசேகர அளித்த அறிக்கைகளை சந்திரபிரேமா குறிப்பாக குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை ஆதரிக்கும் நாடுகளில் அரைவாசி முஸ்லிம் நாடுகள் என்றும், அதன் காரணமாக அந்த நாடுகளின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க இலங்கை கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும்,புர்காவை தடை விதிக்க வர்த்தமானியில் கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்திருந்தார். புர்கா தடை தொடர்பில் இதுவரை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.