புர்கா தடை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.
புர்கா தடை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.
புர்கா தடை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் அதுவிடயத்தில் அவசரப்படத் தேவையில் எனத் தெரிவித்துள்ள நீதியமைச்சர் அலி சப்ரி, அமைச்சரவையில் உள்ள சகலரினதும் கருத்துக்களைப் பெற்று நாட்டுக்கு உகந்த தீர்மானம் ஒன்று எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் மேலும் தெரிவிக்கையில், சிலருக்கு சட்டம் தொடர்பான சரியான தெளிவில்லை. தான் அமைச்சரவைப் பத்திரத்தில் கையொப்பமிட்டதாகவே அவர் (சரத் வீரசேகர) கூறினார். அமைச்சரவையில் காத்திருப்பு பட்டியல் ஒன்றுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையான அமைச்சரவைப் பத்திரங்களே ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். புர்கா விடயத்திற்கு அவசரப்படத்தேவையில்லை. அது வந்ததும் அமைச்சரவையில் உள்ள சகலரதும் அபிப்பிராயங்களைப் பெற்று நாட்டுக்கு உகந்த தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை புர்கா தடை தொடர்பில் தான் நீதியமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.