மத்ரஸாக்கள் தடை விவகாரம். அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு மரிக்கார் எம்பி பதிலடி.

 மத்ரஸாக்கள் தடை விவகாரம். அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு மரிக்கார் எம்பி பதிலடி.


மத்ரஸாக்கள் தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறுகிறார் இராணுவ விதிகளைப் போல நாட்டை ஆள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - எதுல் கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மத்ரஸாக்கள் பௌத்த தர்ம பிரிவேனாக்கள் போன்ற பள்ளிகளாக இருக்கின்றன. தனிநபர்களாக அவர்கள் கூறும் எல்லாவற்றையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையிலும் தடை செய்ய முடியாது. தேவையற்ற பள்ளி கற்பித்தல் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்.

நாட்டின் தவறான தேசபக்தியைப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்தவில்லை. தற்போதைய இலங்கை அரசாங்கம் இந்திய தூதரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்று கேட்க விரும்புகின்றேன்? இந்த தூதுவர் குழு இந் நாட்களில் ஏன் நாடு முழுக்க பேகின்றனர்.

நாட்டில் இந்தியாவின் கட்சியை ஸ்தாபிக்க இந்த அரசாங்கம் விரும்பினாலும் இலங்கையை தேவைக்கேற்ப ஆட்சி செய்வதற்கான இந்த சதித்திட்டத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான நாங்கள் கிராமத்திற்கு கிராமம் சென்று மக்களுக்கு தெளிவுபடுத்துவோம், நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக அடிமட்ட அளவில் ஒரு போராட்டத்தைத் தொடங்க தயாராகி வருகிறோம்.

இந்த அரசாங்கம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமல்ல, தேர்தல்களிலும், தினசரி அடிப்படையிலும் பொய்களை கூறும் அரசாங்கமாக மாறியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.